Enmity
பகை86 couplets, spread across 35 chapters.
AI draft · pending review
Love supports virtue and can also help dissolve the hostile impulse that rises after injury. It does not require reconciliation, proximity, or tolerance of abuse.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
For the envious, envy alone is enough to ruin them — they need no enemy at all.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
If a person could see his own faults as clearly as he sees an enemy's, would any evil ever come to his enduring life?
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
The good call this the highest of all wisdom: refraining from doing harm even to those who are hostile to you.
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
People may escape an enemy however great; the enmity made by one's deed, the verse says, does not leave but follows and strikes.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
The verse attributes to the power of austerity, if the practitioner so intends, the destruction of adversaries and the elevation of those who delight in it.
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்
Anger kills both the smile on the face and gladness within; what other enemy works so directly against us?
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற
Even when an enemy attacks without provocation, retaliating with pain brings suffering from which escape is difficult.
செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்
Wisdom is the instrument that guards against ruin and an inner fortress that even enemies cannot destroy.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்
Make guarding against fault itself the object of protection, because fault itself is the enemy that brings ruin.
குற்றமே காக்க பொருளாக குற்றமே
யற்றந் தரூஉம் பகை
If one can enjoy desired things without enemies knowing that attachment, the enemies' stratagems will fail.
காதல காத லறியாமை யுய்க்கிற்பின்
னேதில வேதிலார் நூல்
Enemies have no opening against one who can live rightly as a member of the worthy.
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்
Abandoning the companionship of the good carries tenfold greater harm than making many enemies.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
Rising against an enemy without fully considering every relevant course is a way of planting that enemy in a bed where it can grow.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
When facing an adversary, endure until a decisive vulnerability appears; when it does, the adversary's dominance will fall.
செறுநரைக் காணிற் சுமக்க விறுவரை
காணிற் கிழக்காந் தலை
Begin no undertaking against an opponent, and do not despise them, until the place for bringing the action to completion has been found.
தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது
If those who have found the fitting place draw near, hold their position, and act, the opponents who planned victory will lose that plan.
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
For rulers, foremost is the quality of showing regard and patiently forbearing even toward people inclined to punish or hurt them.
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணுங்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
If sloth settles in a person responsible for a house, it will place that person in subjection to enemies.
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும்.
When one receives the necessary hardship of worthy effort as part of its joy, a distinction arises that even rivals are moved to respect.
இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன்
னொன்னார் விழையுஞ் சிறப்பு.
A capable minister can detach an enemy's supporters, preserve existing allies, and reconcile those who have separated.
பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு.
One minister beside the ruler who secretly plans harm brings greater danger than an immense multitude of open enemies.
பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ
ரெழுபது கோடி யுறும்.
True speech binds friendly hearers and makes even those opposed to it desire friendship.
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.
The remnant of an unfinished undertaking and the remnant of an incompletely dealt-with enemy will, on reflection, grow and destroy like a remaining spark of fire.
வினைபகை யென்றிரண் டினெச்ச நினையுங்காற்
றீயெச்சம் போலத் தெறும்.
More urgent than doing good to existing allies is winning as allies those who are not joined to the opposing side.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.
If a minister can discern the differing ways of a foreign ruler's gaze, the eyes themselves will declare that ruler's hostility and friendship.
பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்.
A country functions well when severe hunger, unceasing disease, and destructive external enmity do not take hold.
உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.
A country is free of ruinous factions, internal enmity that wastes it from within, and violent bands that unsettle its ruler.
பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு.
Foremost among countries is the land rarely ruined by enemies and whose productive abundance does not diminish even when damage occurs.
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.
A fort has only a small perimeter to guard, encloses ample space, and breaks the fighting resolve of the formidable enemy besieging it.
சிறுகாப்பிற் பேரிடத்த தாகி யுறுபகை
யூக்க மழிப்ப தரண்.
Material resources are an unfailing lamp: they can reach the intended land and cut through the darkness of hostile power there.
பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.
Create material resources: no instrument is sharper for cutting an opponent's arrogant leverage.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.
Even if the enemy host figured as mice roars like the sea, what harm can it do? At the cobra's mere breath it perishes—an intentionally unequal image of ancient martial boasting.
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.
What is as difficult to form as true friendship? Once formed, what other protection is as difficult for hostile action to penetrate?
செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
What comes from open enemies is ten crores better than friendship formed with those who make one an object of laughter.
நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்.
The friendship of those inwardly opposed, who remain close until they find the right opening, is an anvil that supports the blow.
சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
Even after learning many good teachings, those who continue to choose hostility rarely become good-hearted through learning alone.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல
ராகுதன் மாணார்க் கரிது.
Even when an opponent speaks helpful words like a friend, what those words truly serve soon becomes clear.
நட்டார்போ னல்லவை சொல்லினு மொட்டார்சொ
லொல்லை யுணரப் படும்.
Do not take an enemy’s deferential words as goodwill: the bow’s bend, too, is directed toward harm.
சொல்வணக்க மொன்னார்கட் கொள்ளற்க வில்வணக்கந்
தீங்கு குறித்தமை யான்.
A weapon may lie hidden even within an enemy’s supplicating hands; their tears may conceal the same.
தொழுதகை யுள்ளும் படையொடுங்கு மொன்னா
ரழுதகண் ணீரு மனைத்து.
In statecraft, when enemies lavish friendship outwardly while despising you within, remain outwardly cordial while quietly bringing the alliance to an end.
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.
The suffering that those lacking sound understanding inflict upon themselves is difficult even for their enemies to cause.
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது.
The learned call hostility a disease that spreads among all living beings the barren quality called disunion—the inability to live in fellowship with others.
இகலென்ப வெல்லா வுயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கு நோய்.
Even if another person, seeking disunion, does what alienates or hurts you, the higher course is not to inflict hurt in return for the sake of hostility.
பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
யின்னாசெய் யாமை தலை.
If one removes from the mind the grievous disease called hostility, that removal gives an unfailing, imperishable radiance of good name.
இகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.
If the deepest pain among pains—the suffering called hostility—comes to an end, its absence yields the deepest joy among joys.
இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.
Who can hope to overpower those able, when hostility rises, to lean away from it and conduct themselves without accepting it?
இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிகலூக்குந் தன்மை யவர்.
The life of one who says that surpassing others through hostility is sweet stands close to error and complete ruin.
இகலின் மிகலினி தென்பவன் வாழ்க்கை
தவலுங் கெடலு நணித்து.
Those whose harmful judgment clings to hostility cannot see the true and just principle that leads to victory.
மிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ
லின்னா வறிவி னவர்.
Turning away when hostility rises is gain; if one chooses to intensify it, ruin in turn presses forward.
இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
மிகலூக்கி னூக்குமாங் கேடு.
When gain is on its way, one overlooks hostility; when bringing ruin upon oneself, one seeks to magnify it.
இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு.
From hostility arise all forms of pain; from fellowship arises the great wealth called good justice.
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னய மென்னுஞ் செருக்கு.
Guard against taking up enmity with those stronger than yourself; do not refrain, but seek enmity toward those weaker, says the verse.
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை.
Without affection for one’s circle, without strong support, and without strength oneself, how can one repel an enemy’s force?
அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு.
One who fears what need not be feared, does not learn what must be known, lacks accord, and will not give becomes easy for an enemy to overcome.
அஞ்சு மறியா னமைவில னீகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு.
One who never leaves anger and has no self-command is easy for anyone to overcome—at any time, in any place.
நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.
One who does not consult the right path, does not perform fitting actions, does not consider blame, and lacks cultivated conduct makes enmity pleasant to opponents.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
Hostility toward one blinded by rage and possessed by ever-growing desire will be eagerly chosen.
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
Even at some cost, one should surely take up opposition to a person who has begun an undertaking yet keeps doing what is unfit for it.
கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
If one has no cultivated virtue and many faults, one will be left without allies; that very lack becomes strength for opponents.
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனா மேமாப் புடைத்து.
If one meets an enemy ignorant of justice and fearful, the lofty advantage of those opposing that enemy will not depart.
செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்.
Renown will never attach to one who refuses the easy gain available in opposing an unlearned and angry adversary.
கல்லான் வெகுளுஞ் சிறுபொரு ளெஞ்ஞான்று
மொல்லானை ஒல்லா தொளி.
Hostility has no good quality; one should not desire it even in play.
பகையென்னும் பண்பி லதனை யொருவ
னகையேயும் வேண்டற்பாற் றன்று.
Though one may oppose those who plough with the bow, one should not make enemies of those who plough with words.
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.
One who stands alone yet makes enemies of many is poorer in judgment than even the people whom the classical rhetoric stigmatizes as “mad.”
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
The world rests within the greatness of the ruler whose character can turn enmity into friendship.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
றகைமைக்கட் டங்கிற் றுலகு.
If one person has no ally and faces two enemies, take the more suitable one of those two as a temporary ally.
தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவன்
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.
Whether the enemy was previously understood or not, at a moment of ruin leave the relationship unresolved—neither fully join nor fully separate.
தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்.
Do not tell your suffering to those unable to understand it, and do not expose your weakness in the presence of an enemy.
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மேன்மை பகைவ ரகத்து.
Understand the proper method, build yourself to match it, and protect yourself; then the confidence lodged in your enemies will disappear.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.
Remove the thorn tree while it is still tender; once it has matured, it will injure the hand of the person who tries to clear it.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லுங் காழ்த்த விடத்து.
Those rulers who fail, when able, to break the pride of active enemies certainly will not remain alive even for the measure of a breath.
உயிர்ப்ப வுளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
Even shade and water become painful when they cause illness; so do the qualities of intimates when their conduct causes harm.
நிழனீரு மின்னாத வின்ன தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.
Do not fear the enemy who stands openly like a sword; beware the association of an enemy who appears like kin.
வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
Guard yourself against internal enmity; in a moment of weakness it will destroy unerringly, like the potter’s tool that cuts the clay vessel free.
உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
If internal enmity arises from a mind not truly in accord, it brings many faults that estrange one’s own circle.
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்.
If internal enmity appears under the form of kinship, it brings many harms—extending, in the ancient royal frame, even to death.
உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா
னேதம் பலவுந் தரும்.
If hostility arises among those joined to him, it is always difficult for a ruler to escape death.
ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது.
Though it may appear joined like a metal container fitted with its lid, a household possessed by internal enmity is not truly united.
செப்பின் புணர்ச்சிபோற் கூடினுங் கூடாதே
யுட்பகை யுற்ற குடி.
A household afflicted by internal enmity has its strength worn away, as iron is worn down by the file that rubs against it.
அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி.
Though internal enmity be as small as a split sesame seed, the ruin of an entire greatness lies within it.
எட்பக வன்ன சிறுமைத்தே யாயினு
முட்பகை யுள்ளதாங் கேடு.
Life with those who lack true concord is like dwelling together with a snake inside one hut.
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று.
Rulers who live in love with intoxicating drink are never feared by enemies; they lose even the splendour they had already attained.
உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.
The strength of those who get things done is the bending low; and that same bending is the weapon by which the worthy turn hostility out of their opponents — the commentary specifying that the bending is done in order to gather those who will help.
ஆற்றுவா ராற்றல் பணித லதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.
Contempt is painful even in play; therefore, in those who conduct themselves knowing what others are carrying, even amid enmity there is no contempt but only the agreeable qualities.
நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
Even towards those who conduct hostility rather than friendship and do things without grace, failing to perform one's own quality is, for a person of discernment, the lowest place.
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.