Fear
அச்சம்31 couplets, spread across 16 chapters.
AI draft · pending review
Hatred, sin, fear, and disgrace — these four never leave the man who violates another's home.
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
Those hardened by evil deeds do not fear the moral intoxication called wrongdoing; people of worth fear precisely that loss of moral alarm.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Because evil deeds produce painful consequences, evil deeds are to be feared even more than fire.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
The wise say that no deed which makes one's own life fear arises for one who protects enduring living beings and is governed by compassion.
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை
When one goes to oppress someone weaker than oneself, let one remember one's own fear when standing before someone stronger.
வலியார்முன் றன்னை நினைக்க தான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து
Among all who renounced household life from fear of continued birth, foremost is the one who fears the wrong of killing and keeps non-killing in mind.
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.
Not fearing what ought to be feared is folly; fearing what deserves fear is the conduct of the knowledgeable.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்
No suffering arrives to make those with foresight tremble when they understand what is coming and protect against it in advance.
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்
Those who fear the reproach of disgrace do not begin an undertaking that has not been examined into clarity.
தெளிவிலதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்
Just as a fort cannot benefit one whose mind is ruled by fear, no resource benefits one whose mind carries forgetful negligence.
அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
If a ruler follows a cruel sceptre through deeds that make the people tremble, he will certainly perish quickly.
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லைக் கெடும்.
The king who has not built a fort before war arrives will be seized by fear when battle comes and will perish swiftly.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
Though the elephant is huge and armed with sharp tusks, it fears when a tiger attacks.
பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
Rulers of a smaller realm, fearing their people's inward trembling when confronted by greater power, bow and accept when fitting terms of peace are available.
உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
Those of disciplined learning, who understand both the kind of assembly and the ordering of words, do not let fear make their speech falter before a capable audience.
வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
றொகையறிந்த தூய்மை யவர்.
Many may stand firm even before death in battle; rarer are those who can enter a discerning assembly and speak without fear.
பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
ரவையகத் தஞ்சா தவர்.
Learn the method and measure of reasoning by the proper discipline of speech, so that you may answer aptly and without fear in an assembly.
ஆற்றி னளவறிந்து கற்க வவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
What use is a sword to one without the courage to wield it? Likewise, what use are books to one who fears a subtle learned assembly?
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு.
Learning held by one who fears speaking in an assembly is like a sharp sword held by someone unable to use it amid battle.
பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.
Those who have learned and understood yet fear the assembly of good people are classically judged below the unlearned, because their learning is not used there.
கல்லாதவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.
Though physically present, those who fear the forum and cannot make what they learned reach its hearers are socially as if absent.
உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
For the fierce warrior, if the angry eye breaks its gaze and blinks when the enemy throws a spear, is that not itself retreat?
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னொட்டன்றோ வன்க ணவர்க்கு.
One who fears what need not be feared, does not learn what must be known, lacks accord, and will not give becomes easy for an enemy to overcome.
அஞ்சு மறியா னமைவில னீகலான்
றஞ்ச மெளியன் பகைக்கு.
If one meets an enemy ignorant of justice and fearful, the lofty advantage of those opposing that enemy will not depart.
செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்.
Do not fear the enemy who stands openly like a sword; beware the association of an enemy who appears like kin.
வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
Life with those who lack true concord is like dwelling together with a snake inside one hut.
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று.
Those targeted by a king of fierce strength against enemies cannot remain anywhere, wherever they flee.
யாண்டுச்சென் றியாண்டு முளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட்ட வர்.
In its ancient patriarchal frame, the couplet says: the fear that lowers a man before his wife continually brings him shame among the good.
இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை யெஞ்ஞான்று
நல்லாரு ணாணுத் தரும்.
In its ancient patriarchal and religious frame, the couplet says: a man who fears his wife lacks afterlife benefit, and even his mastery of action gains no celebrated distinction.
மனையாளை யஞ்சு மறுமை யிலாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.
In its ancient patriarchal frame, the couplet says: a man who fears his wife will always fear doing good for good people.
இல்லாளை யஞ்சுவா னஞ்சுமற் றெஞ்ஞான்று
நல்லார்க்கு நல்ல செயல்.
In its ancient patriarchal frame, the couplet says: even if they live like the gods, those who fear their wife's bamboo-like shoulders lack masculine distinction.
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்டோ ளஞ்சு பவர்.