Skip to content

Folly

பேதைமை

27 couplets, spread across 17 chapters.

AI draft · pending review

Kural 141 Not Coveting Another's Wife பிறன்இல் விழையாமை

The folly of desiring another man's wife is never found in those who have truly understood virtue and right living.

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.

Kural 142 Not Coveting Another's Wife பிறன்இல் விழையாமை

Of all who have strayed from virtue, none is a greater fool than the one who waits at another man's door.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

Kural 337 Impermanence நிலையாமை

People do not know whether they will live even for one moment, yet they entertain not merely millions but countless plans.

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல பல

Kural 372 Destiny ஊழ்

When loss-producing destiny arrives, it makes understanding foolish; when gain-producing destiny arrives, it expands understanding.

பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை

Kural 417 Learning by Listening கேள்வி

Those whose listening has accumulated through careful discernment will not voice a foolish claim, even when they have first understood something incorrectly.

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்

Kural 428 Possession of Knowledge அறிவுடைமை

Not fearing what ought to be feared is folly; fearing what deserves fear is the conduct of the knowledgeable.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்

Kural 507 Testing and Trusting People தெரிந்து தெளிதல்

Choosing someone solely out of affection when they lack the knowledge a trusted role requires brings every kind of folly.

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.

Kural 603 Abstention from Sloth மடியின்மை

The house of the foolish person who holds destructive sloth within will decline even before that person does.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.

Kural 797 Examining Friendship நட்பாராய்தல்

The gain said to belong to a person is this: leaving behind friendship with those who persist in foolish conduct.

ஊதிய மென்ப தொருவற்குப் பேதையார்
கேண்மை யொரீஇ விடல்.

Kural 816 Harmful Friendship தீநட்பு

The estrangement of a discerning person is ten million times better than intimate friendship with one acting in practical folly.

பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.

Kural 831 Folly பேதைமை

What is the clearest form of folly? Choosing what brings harm and letting go of what brings benefit.

பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
டூதியம் போக விடல்.

Kural 832 Folly பேதைமை

Of all follies, the greatest is becoming attached to conduct that is not right or fitting for the responsibility one has accepted.

பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.

Kural 833 Folly பேதைமை

Folly’s pattern is to feel no shame where shame is due, seek none of what should be sought, break human bonds through word and deed, and care for nothing worthy of care.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.

Kural 834 Folly பேதைமை

None is more foolish than one who studies and understands restraint, explains it to others, yet does not practise it personally.

ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.

Kural 835 Folly பேதைமை

Within one birth, a person can commit a deed that, in the verse's moral cosmology, sinks them in hell through seven births.

ஒருமைச் செயலாற்றும் பேதை யெழுமையுந்
தான்புக் கழுந்து மளறு.

Kural 836 Folly பேதைமை

If one who does not know the method undertakes a task, will the work merely fail? The doer also becomes bound in trouble.

பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.

Kural 837 Folly பேதைமை

When a foolish person comes into great wealth, unrelated people eat their fill while those bound to that person go hungry.

ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.

Kural 838 Folly பேதைமை

If a person already ruled by confused judgment gains even one possession or power, the confusion grows like intoxication added to an existing delirium.

மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.

Kural 839 Folly பேதைமை

The friendship of people who act without good judgment is ‘very pleasant’ in this ironic sense: when it ends, the separation causes no pain.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கட்
பீழை தருவதொன் றில்.

Kural 840 Folly பேதைமை

A person who enters an assembly of the learned without fitting understanding or conduct is like placing an unwashed foot upon a clean, comfortable bed.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.

Kural 867 The Character of Enmity பகைமாட்சி

Even at some cost, one should surely take up opposition to a person who has begun an undertaking yet keeps doing what is unfit for it.

கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.

Kural 873 Assessing Enmity பகைத்திறந்தெரிதல்

One who stands alone yet makes enemies of many is poorer in judgment than even the people whom the classical rhetoric stigmatizes as “mad.”

ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Kural 893 Not Offending the Great and Powerful பெரியாரைப்பிழையாமை

If one desires ruin, let one act without heeding counsel; if one desires to be struck down, let one offend those able to do it.

கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு.

Kural 910 Following a Wife's Direction பெண்வழிச்சேறல்

In its ancient patriarchal frame, the couplet says: those who possess a mind joined to strategic thought and the resources it creates never suffer the folly born of attachment to a wife.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.

Kural 929 Abstaining from Intoxicants கள்ளுண்ணாமை

To set out reasons for a man sunk in drink is like searching, torch in hand, for one who has gone down beneath the water.

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

Kural 976 Greatness பெருமை

In the awareness of the small there is not the aim that says: we shall attend upon the great and take their nature for ourselves.

சிறியா ருணர்ச்சியு ளில்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேமென்னு நோக்கு.

Kural 999 Courtesy and Consideration பண்புடைமை

For those who cannot mingle with anybody and be glad within, this vast and mighty world lies in the portion of darkness even at midday.

நகல்வல்ல ரல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள்.

← All themes