Gratitude
நன்றி11 couplets, spread across 2 chapters.
AI draft · pending review
A kindness done for you by someone you had never helped first is so rare that all the earth and all the sky, given in return, could hardly repay it.
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
A favour may be small in itself, yet if it comes at the exact hour of need, it is greater by far than the whole world.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
When you truly weigh the goodwill of those who helped you without once asking what they would get back, it runs deeper than the sea.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
A good done to them may be as small as a millet seed, but those who know what a kindness is worth hold it as large as a palmyra tree.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
What is owed for a help is not set by the size of the help, but by the worth of the one who received it.
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.
Never forget the friendship of the faultless, and never let go of those who were your strength in the time of trouble.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துட் டுப்பாயார் நட்பு.
The good remember, through all the births of seven lives, the friendship of those who once wiped away their grief.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
To forget a kindness done to you is not right; to forget a wrong the very day it is done — that is right.
நன்றிமறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.
Even if someone wounds you as cruelly as killing, the moment you recall one good they once did, the wrong is wiped away.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.
Those who have destroyed every other good may still find a way back; but for the one who destroys a kindness done to them, there is none.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
It is better not to acquire the poor friendship of those who fail to become protection even after help has been rendered to them.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
யெய்தலி னெய்தாமை நன்று.