Avoiding Faults
On identifying and correcting one's own faults before judging others, and on preventing small neglected errors from growing.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
“Who arrogance, and wrath, and littleness of low desire restrain, / To sure increase of lofty dignity attain.”
இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு
“A niggard hand, o'erweening self-regard, and mirth / Unseemly, bring disgrace to men of kingly brith.”
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
“Though small as millet-seed the fault men deem; / As palm tree vast to those who fear disgrace 'twill seem.”
குற்றமே காக்க பொருளாக குற்றமே
யற்றந் தரூஉம் பகை
“Freedom from faults is wealth; watch heedfully / 'Gainst these, for fault is fatal enmity.”
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
“His joy who guards not 'gainst the coming evil day, / Like straw before the fire shall swift consume away.”
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு
“Faultless the king who first his own faults cures, and then / Permits himself to scan faults of other men.”
செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்
“Who leaves undone what should be done, with niggard mind, / His wealth shall perish, leaving not a wrack behind.”
பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று
“The greed of soul that avarice men call, / When faults are summed, is worst of all.”
வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
“Never indulge in self-complaisant mood, / Nor deed desire that yields no gain of good.”
காதல காத லறியாமை யுய்க்கிற்பின்
னேதில வேதிலார் நூல்
“If, to your foes unknown, you cherish what you love, / Counsels of men who wish you harm will harmless prove.”