Avoiding Fear-Inspiring Rule
On restraint in punishment, speech, and public authority, so that a ruler does not terrify the people or weaken the realm through harshness.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தாங் கொறுப்பது வேந்து.
“Who punishes, investigation made in due degree, / So as to stay advance of crime, a king is he.”
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.
“For length of days with still increasing joys on Heav'n who call, / Should raise the rod with brow severe, but let it gently fall.”
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லைக் கெடும்.
“Where subjects dread of cruel wrongs endure, / Ruin to unjust king is swift and sure.”
இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.
“'Ah! cruel is our king', where subjects sadly say, / His age shall dwindle, swift his joy of life decay.”
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
“Whom subjects scarce may see, of harsh forbidding countenance; / His ample wealth shall waste, blasted by demon's glance.”
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.
“The tyrant, harsh in speach and hard of eye, / His ample joy, swift fading, soon shall die.”
கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்.
“Harsh words and punishments severe beyond the right, / Are file that wears away the monarch's conquering might.”
இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.
“Who leaves the work to those around, and thinks of it no more; / If he in wrathful mood reprove, his prosperous days are o'er!”
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
“Who builds no fort whence he may foe defy, / In time of war shall fear and swiftly die.”
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.
“Tyrants with fools their counsels share: / Earth can no heavier burthen bear!”