Truthfulness
On speech free from harm and falsehood, including the chapter's carefully bounded treatment of a beneficial untruth.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
“You ask, in lips of men what 'truth' may be; / 'Tis speech from every taint of evil free.”
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
“Falsehood may take the place of truthful word, / If blessing, free from fault, it can afford.”
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்
“Speak not a word which false thy own heart knows / Self-kindled fire within the false one's spirit glows.”
உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன்
“True to his inmost soul who lives,- enshrined / He lives in souls of all mankind.”
மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை
“Greater is he who speaks the truth with full consenting mind. / Than men whose lives have penitence and charity combined.”
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்
“No praise like that of words from falsehood free; / This every virtue yields spontaneously.”
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
“If all your life be utter truth, the truth alone, / 'Tis well, though other virtuous acts be left undone.”
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
“Outward purity the water will bestow; / Inward purity from truth alone will flow.”
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
“Every lamp is not a lamp in wise men's sight; / That's the lamp with truth's pure radiance bright.”
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற
“Of all good things we've scanned with studious care, / There's nought that can with truthfulness compare.”