Cherishing Kindred
On sustaining bonds with kindred through remembrance, generosity, measured anger, fair recognition, and thoughtful reconciliation.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
“When wealth is fled, old kindness still to show, / Is kindly grace that only kinsmen know.”
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.
“The gift of kin's unfailing love bestows / Much gain of good, like flower that fadeless blows.”
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
“His joy of life who mingles not with kinsmen gathered round, / Is lake where streams pour in, with no encircling bound.”
சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
“The profit gained by wealth's increase, / Is living compassed round by relatives in peace.”
கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
“Who knows the use of pleasant words, and liberal gifts can give, / Connections, heaps of them, surrounding him shall live.”
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
“Than one who gifts bestows and wrath restrains, / Through the wide world none larger following gains.”
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.
“The crows conceal not, call their friends to come, then eat; / Increase of good such worthy ones shall meet.”
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.
“Where king regards not all alike, but each in his degree, / 'Neath such discerning rule many dwell happily.”
தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்.
“Who once were his, and then forsook him, as before / Will come around, when cause of disagreement is no more.”
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.
“Who causeless went away, then to return, for any cause, ask leave; / The king should sift their motives well, consider, and receive!”