Military Spirit
On martial courage, honour, wounds, danger, and death within the chapter's explicit ancient military frame.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.
“Ye foes! stand not before my lord! for many a one / Who did my lord withstand, now stands in stone!”
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.
“Who aims at elephant, though dart should fail, has greater praise. / Than he who woodland hare with winged arrow slays.”
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றுக்கா
லூராண்மை மற்றத னெஃகு.
“Fierceness in hour of strife heroic greatness shows; / Its edge is kindness to our suffering foes.”
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
“At elephant he hurls the dart in hand; for weapon pressed, / He laughs and plucks the javelin from his wounded breast.”
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னொட்டன்றோ வன்க ணவர்க்கு.
“To hero fearless must it not defeat appear, / If he but wink his eye when foemen hurls his spear.”
விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.
“The heroes, counting up their days, set down as vain / Each day when they no glorious wound sustain.”
சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
“Who seek for world-wide fame, regardless of their life, / The glorious clasp adorns, sign of heroic strife.”
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர்குன்ற லிலர்.
“Fearless they rush where'er 'the tide of battle rolls'; / The king's reproof damps not the ardour of their eager souls.”
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.
“Who says they err, and visits them scorn, / Who die and faithful guard the vow they've sworn?”
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் தக்க துடைத்து.
“If monarch's eyes o'erflow with tears for hero slain, / Who would not beg such boon of glorious death to gain?”