Austerity
On bearing one's own hardship while refusing to harm other lives, and on the discipline and moral force attributed to austerity.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு
“To bear due penitential pains, while no offence / He causes others, is the type of 'penitence'.”
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது
“To 'penitents' sincere avails their 'penitence'; / Where that is not, 'tis but a vain pretence.”
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்க டவம்
“Have other men forgotten 'penitence' who strive / To earn for penitents the things by which they live?”
ஒன்னார்த் தெறலு முவந்தாரை யாக்கலு
மெண்ணிற் றவத்தான் வரும்
“Destruction to his foes, to friends increase of joy. / The 'penitent' can cause, if this his thoughts employ.”
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்
“That what they wish may, as they wish, be won, / By men on earth are works of painful 'penance' done.”
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு
“Who works of 'penance' do, their end attain, / Others in passion's net enshared, toil but in vain.”
சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
“The hotter glows the fining fire, the gold the brighter shines; / The pain of penitence, like fire, the soul of man refines.”
தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
“Who gains himself in utter self-control, / Him worships every other living soul.”
கூற்றங் குதித்தலுங் கைகூடு நோற்றலி
னாற்ற றலைப்பட் டவர்க்கு
“E'en over death the victory he may gain, / If power by penance won his soul obtain.”
இலர்பல ராகிய காரண நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
“The many all things lack! The cause is plain, / The 'penitents' are few. The many shun such pain.”