Knowing One's Duty to Society
On public-spirited help that expects no return, and on wealth becoming useful when it serves the wider community.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.
“Duty demands no recompense; to clouds of heaven, / By men on earth, what answering gift is given?”
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
“The worthy say, when wealth rewards their toil-spent hours, / For uses of beneficence alone 'tis ours.”
புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.
“To 'due beneficence' no equal good we know, / Amid the happy gods, or in this world below.”
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
“Who knows what's human life's befitting grace, / He lives; the rest 'mongst dead men have their place.”
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு
“The wealth of men who love the 'fitting way,' the truly wise, / Is as when water fills the lake that village needs supplies.”
பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்
“A tree that fruits in th' hamlet's central mart, / Is wealth that falls to men of liberal heart.”
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்
“Unfailing tree that healing balm distils from every part, / Is ample wealth that falls to him of large and noble heart.”
இடனில் பருவத்து மொப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்
“E'en when resources fall, they weary not of 'kindness due,'- / They to whom Duty's self appears in vision true.”
நயனுடையா னல்கூர்ந்தா னாதல் செயுநீர
செய்யா தமைகலா வாறு
“The kindly-hearted man is poor in this alone, / When power of doing deeds of goodness he finds none.”
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
“Though by 'beneficence,' the loss of all should come, / 'Twere meet man sold himself, and bought it with the sum.”